|
Alaikal e-news
Nyheder på Tamil
-
பாகிஸ்தானில் 10 லட்சம் பேர் பாதிப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் வெள்ளத்தால் சுமார் பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு நீரால் சூழப்பட்ட பகுதிகளை சென்று அடைவதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கின்ற சுமார் 30 லட்சம் பேர் வசிக்கும் பெஷாவர் பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. கைபர் பாஹ்துன்க்வா பிராந்தியத்தின் தகவல் தொடர்பு அமைச்சரான மியான் இஃப்திகார் ஹுசைன் சுமார் 800 பேர் பலியாகியுள்ளதாக கூறியுள்ளார். [...]
-
காமன்வெல்த் ஏற்பாட்டில் ஊழல்?
டெல்லியில் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளில் பெருமளவு ஊழல்கள் நடந்திருப்பதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விளையாட்டுக் கட்டமைப்புக்களுக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை, நடந்து முடிந்த பணிகள் தரமற்றவையாக உள்ளன போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. போட்டிகள் துவங்குவதற்கு முன்பு பணிகள் நிறைவடையுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஏற்பாடுகளில் ஊழல் நடந்திருப்பதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் [...]
-
கடல்நீர் குடிநீராக மாறும் ஆலை சென்னையில்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தினந்தோரும் 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றக் கூடிய சுந்திகரிப்பு ஆலை சனிக்கிழமை முதல் செயல்படவுள்ளது. இந்த ஆலையின் மூலம் ஒரு லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்ற 5 பைசாவுக்கு குறைவாகவே செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரம் லிட்டர் குடிநீர் 48 ரூபாய் 66 பைசாவுக்கு வாங்கப்படும் என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் தலைவர் சிவதாஸ் மீனா தமிழோசையிடம் தெரிவித்தார். தற்போது நாளோன்றுக்கு [...]
-
நீதிக்கான பயணம்
வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம்.-இங்கிலாந்து Valvettithurai Welfare Association- uk நீதிக்கான பயணம் 30.07.2010 அன்பான தமிழ்மக்களே, எமது மக்களுக்கான நீதி மறுக்கப்பட்ட ஒரு சு10ழலில்,எல்லாவகையானநம்பிக்கைகளும் வற்றிப்போய்விட்ட ஒரு நிகழ்காலப்பொழுதில்,எமது இனத்தைச் சு10ழவும் சோர்வும் ஏக்கமும் நிறைந்த நேரத்தில் ‘சிவந்தன்’ என்ற இளைஞன் லண்டனில் இருந்து ஜெனீவா வரைக்கும் ‘நீதிக்கான நடைப்பயணத்தை’ மேற்கொண்டு இருக்கிறார். பல நூற்றுக்கணக்கான மைல்கள் நீளமான பாதையில்,ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்த வீதிகளில் கடும்வெயில் நாட்களில் அவர் நடப்பது என்பது மிகவும் [...]
-
முள்வேலிக்கு உள்ளே-வெளியே…! ச.ச.முத்து
‘Childhood is measured out by sounds and smells and sights, Before the dark hour of reason Grows’ -John Betjeman. மிக அண்மையில் ஒருதிரைப்படம் எதேச்சையாக பார்க்க ;நேர்ந்தது. முள்வேலிகள் சு10ழ்ந்த கொலைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் எட்டுவயது யூத சிறுவனுக்கும் அந்த முகாமின் அதிகாரியின் எட்டுவயது ஜேர்மனிய சிறுவனுக்குமான நட்புக்குள்ளாக யூத இனஅழிப்பை ஆழமாக சொல்லிச்செல்கிறது இத்திரைப்படம். ‘ப்றூனோ’ என்ற ஜேர்மனியசிறுவனுக்கும் ‘சாமுவல்’ என்ற கோடுகள் நிறைந்த கைதி ஆடைஅணிந்த யூதசிறுவனுக்கும் இடையில் [...]
-
கரபந்தாட்டத்தின் காவிய வீரன் சிவநாதன்
புலம் பெயர் மக்கள் நல்வாழ்விற்காக அலைகள் வழங்கும் வாராந்த சிந்தனைத் தொடர் 31.07.2010 ஈழத்தின் ஓவர்கேம் ஆட்டம் மறுக்கவோ மறக்கவோ முடியாத ஒரு சாதனை வீரன் சிவநாதன் யாழ். குடாநாட்டில் புகழோடு வலம்வந்த பெரும்பாலான கரபந்தாட்ட வீரர்களின் விளையாட்டுக்களையும், அவர்களுடைய விளையாட்டு நுட்பங்களையும் நேரடியாக பார்த்த அனுபவம் என்னிடம் இருக்கிறது. இந்த வீரர்கள் எல்லோரின் விளையாட்டிலும் வௌ;வேறு சிறப்புக்கள் இருந்தாலும்கூட, தொகுத்துப் பார்த்தால் அவர்களுடைய விளையாட்டு முறைமைக்கான முள்ளந்தண்டு ஒன்றாகவே இருக்கும். ஓவர்கேம் என்றால் அடிக்கும் முறை, [...]
-
சியத தாக்குதல்-அமெரிக்கா கண்டனம்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் சியத ஊடக நிறுவனத்தின் அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தை அமெரிக்கா கண்டித்துள்ளது. சியத ஊடக நிறுவனம் தாக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போன சம்பவம் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக புரியப்படுகின்ற அனைத்து வன்முறைகளும் இலங்கையில் ஊடகவியலாளர்களை ஒடுக்கி ஊடக சுதந்திரத்தை மேலும் நசுக்கும் நடவடிக்கைகளாகவே அமைந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பகமான விசாரணையின் மூலமே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் என சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா, [...]
-
8வது நாளில் சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைப்பயணம் கவனயீர்ப்பு நிகழ்வு பிற்போடப்படலாம்
தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 8வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார்.எனினும் எதிர்வரும் 6ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு பிற்போடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று 12 மணித்தியாலங்கள் நடந்து 41 கிலோமீற்றர் தூரத்தை சிவந்தன் கடந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி லண்டனில் இருந்து மனிதநேயப் பயணத்தை ஆரம்பித்த இவர், நூற்றுக்கும் மேற்பட்ட கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்திருந்தார். கடந்த [...]
-
சில படையதிகாரிகளை கோத்தபாய அணியினர் கொன்றுவிட்டனர்
போர்குற்றத்தில் ஈடுபட்ட சில படையதிகாரிகளை கோத்தபாய அணியினர் கொன்றுவிட்டனர்: தப்பி வந்த சிங்கள ஊடகவியலாளர் தகவல் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய படைப்பிரிவு சுட்டுக் கொலைசெய்து விட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். லங்கா ஈ. நியூஸ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இவர் இலங்கை படைப்புலனாய்வாளர்களினால் தேடப்பட்ட நிலையில் வெளி நாடு ஒன்றிற்கு தப்பி வந்துள்ளார். இவரது தகவலின் படி கோத்தபாயவின் நேரடி [...]
-
அரசியல் நோக்கத்தோடு என் மீது வழக்கு: பொன்சேகா
இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்கு விசாரணை கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தின் முன் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்டார். வன்முறைக்கு பொது மக்களைத் தூண்டியதாக பொன்சேகா மீது தொடரப்பட்ட வழக்கில் அப்போது விசாரணை நடைபெற்றது என்று வழக்கறிஞர் லாதுவஹெத்தி கூறினார். இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும். அப்போது 20 சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள். இதில் [...]
|
|
|